நான் என்னை உணரத் தெரிந்தபோது
என் மனதிற்குள் நான் வரைந்த ஓவியம் ..
என் மனதில் மின்னி இன்னும் மறையாமல்
இருக்கும் மின்னலை நேரில் கண்டேன் ...
அந்த இனியக்குரலின் ரீங்காரம்
விரல் மீட்டிய வீணையின் இசையாக
என் இதயத்தை வருடிக்கொண்டிருக்கிறது ...
அந்த ஓவியத்தோடு நான் நடந்து போன இடங்கள்
என் நினைவுகளை பசுமையாக வைத்திருக்கிறது
உறங்கும் போதும் ஓசையை எனக்கு உணர்த்தியவள்
இன்றும் நான் உணர்ந்து கொண்டுஇருக்கிறேன்
மலர்ந்த முகத்துடன் இருக்க கற்றுக்கொடுத்தவள்
கவலை வந்தால் இன்றும் உன் முகம் தான் என் முன்...
அந்த நினைவுகளை கொண்டே
இனி எனது பிறப்புகள் இருக்கும்
- கவிஞர் சுந்தர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக